Saturday, May 4, 2024
Home » பாலமுனை பிரதேசத்துக்கு ஹரீஸ் எம்.பி விஜயம்
வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட

பாலமுனை பிரதேசத்துக்கு ஹரீஸ் எம்.பி விஜயம்

by mahesh
January 17, 2024 10:00 am 0 comment

அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பாலமுனை பிரதேசம் மற்றும் பாதிப்புக்குள்ளான​ பாடசாலைகளை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் நேற்றுமுன்தினம் (15) சென்று பார்வையிட்டார்.

இதன்போது அட்டாளைச்சேனை பிரதேசசபையின் முன்னாள் உதவி தவிசாளர் எஸ்.எம்.எம்.ஹனிபா,அதிபர் எம்.ஏ.அபாஹுல்பான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகள் செய்துகொடுக்கப்பட்டதுடன் பாலமுனை தாறுல் ஹஸனாத் வித்தியாலயத்துக்கு தேவையான உதவிகளும் வழங்கப்பட்டன.

(பாலமுனை கிழக்கு தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT