Saturday, May 4, 2024
Home » அம்பாறையில் மாபெரும் பட்டத்திருவிழா

அம்பாறையில் மாபெரும் பட்டத்திருவிழா

by mahesh
January 17, 2024 10:10 am 0 comment

அம்பாறை விநாயகபுரம் வலம்புரியோன் அமைப்பின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் தினத்தை சிறப்பிக்கும் வகையிலான மாபெரும் பட்டத்திருவிழா மிகவும் பிரமாண்டமான முறையில் நேற்றுமுன்தினம் (15) மாலை விநாயகபுரம் கடற்கரை முற்ற வெளியில் நடைபெற்றது.

வலம்புரியோன் அமைப்பின் தலைவர் வி.ஜெயகாந்தன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

பட்டம் விடும் போட்டி, ஆண்களுக்கான கயிறுழுத்தல், பெண்களுக்கான சங்கீதக்கதிரை மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளுடன் இன்னிசை நிகழ்ச்சியும் சிறப்பு நிகழ்வாக நடைபெற்றது. வண்ணமயமாக மாறிய வித்தியாசமான பட்டங்களை வானில் பறக்கவிட்டதுடன் அது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இதேநேரம் இன்னிசை நிகழ்வும் ஆரம்பிக்கப்பட்டதுடன் இதில் உள்ளூர் வெளியூர் கலைஞர்களும் பங்கேற்று பல பாடல்களை பாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினர்.

கயிறு இழுத்தல் , பெண்கள், சிறுவர்களுக்கான போட்டிகளும் நடைபெற்றன.

பட்டம் விடும் போட்டியில் கலந்து கொண்டு முதலிடத்தைப் பெற்றவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாவும் இரண்டாமிடத்தைப் பெற்றவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாவும் மூன்றாமிடத்தை பெற்றவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டதுடன் 7 ஆறுதல் பரிசில்களும் ஏனைய போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

(வாச்சிக்குடா விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT