Sunday, May 5, 2024
Home » முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விசேட கலந்துரையாடல்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விசேட கலந்துரையாடல்

by mahesh
January 17, 2024 11:10 am 0 comment

புத்தளம், கற்பிட்டி, வண்ணாத்திவில்லு ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்குட்பட்ட சகல முன்பள்ளி ஆசிரியைகளுக்கான விசேட கலந்துரையாடல் சமூக சேவையாளரும், ஐ.தே.கட்சியின் புத்தளம் தொகுதி முகாமையாளருமான எம்.என்.எம்.நுஸ்கியின் ஏற்பாட்டில் அண்மையில் புத்தளம் காரியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து முன்பள்ளி ஆசிரியைகளுக்கான இணைப்பாளர் அசங்க சிறீனாத் கலந்து கொண்டார்.

எதிர்காலத்தில் அரசினால் முன்பள்ளிகளுக்கு வழங்கப்படவுள்ள சலுகைகள், ஆசிரியைகளுக்கு கிடைக்கப்பெறவுள்ள வரப்பிரசாதங்கள், ஆசிரியைகள் மேற்கொள்ளும் அசௌகரியங்கள், முன்பள்ளி மாணவர்களுக்கு அரசினால் வழங்கப்படவுள்ள காலை உணவு தொடர்பாகவும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.

சுமார் 85 ற்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியைகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

(புத்தளம் தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT