மலையக தியாகி முல்லோயா கோவிந்தனின் நினைவுதினம் நுவரெலியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ஆர்.ராஜாராம் ஜெயக்குமார் உள்ளிட்ட குழுவினரின் ஏற்பாட்டில் நுவரெலியாவிலுள்ள மலையக தியாகிகள் நினைவுதூபியில் இவர் நினைவுகூரப்பட்டார்.
சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தாலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன், பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான சங்கரன் விஜயசந்திரன், பிரதி செயலாளர் பத்மநாதன், மலையக தொழிலாளர் முன்னணியின் பிரதி செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நுவரெலியா தினகரன் நிருபர்