Sunday, April 28, 2024
Home » நிந்தவூரில் விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு; மூவர் கைது

நிந்தவூரில் விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு; மூவர் கைது

- போதைப்பொருட்கள், பணம் என்பன மீட்பு

by Prashahini
January 9, 2024 12:10 pm 0 comment

நிந்தவூர் அட்டப்பள்ள பிரதேசத்தில் நேற்று (08) மாலை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது பெருந்தொகையான பணம் மற்றும் போதைப் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப் தெரிவித்தார்.

இந்த விஷேட சுற்றிவளைப்பானது தங்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் படி, நேற்று காலை ஆரம்பிக்கப்பட்டதாகவும், இதில் மூவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் சூட்சுமமான முறையில் சிறிய ஒலிபெருக்கி கருவியில் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் குறித்த போரதப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த விஷேட சுற்றி வளைப்பில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சந்தேகநபர்களினால் தாக்கப்பட்டு தற்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விரைவில் சந்தேகநபர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், போதைப் பொருட்களுக்கு எதிரான தனது நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறும் என்றும் நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப் மேலும் தெரிவித்தார்.

நிந்தவூர் குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT