Sunday, April 28, 2024
Home » யாழ். பல்கலை சித்த மருத்துவதுறையை பீடமாக தரமுயர்த்த கோரிக்கை

யாழ். பல்கலை சித்த மருத்துவதுறையை பீடமாக தரமுயர்த்த கோரிக்கை

- மேலும் பல்வேறு விடயங்களும் சுட்டிக்காட்டப்பட்டன

by Prashahini
January 6, 2024 11:18 am 0 comment

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ துறையை பீடமாக தரமுயர்த்த வேண்டும் என மாணவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையேயான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்று (05) இடம்பெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா ஆகியோரும் அக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலில், மாணவர்களினால், மாணவ விடுதிகளில் உள்ள குறைபாடு, முகாமைத்துவ பீடத்திற்கான பஸ் வசதிகளை ஏற்படுத்தல், சித்த மருத்துவ துறையை பீடமாக தரமுயர்த்தல், இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களுக்கான உள்ளக பயிற்சி வழங்குதல் போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

இக்கலந்துரையிடாலில் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட 37 மாணவர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT