தென் கொரியாவில் வேலைவாய்ப்புகளைப் பெறும் முதல் குழுவாக நூறு இளைஞர்கள் நேற்று UL 470 விமானத்தில் தென் கொரியாவுக்குப் புறப்பட்டனர்.
தென் கொரிய வேலை வாய்ப்பைப் பெற்ற 832 ஆவது குழுவாக புறப்பட்ட இக்குழுவுக்கு தென்கொரியாவில் உற்பத்தித்துறையில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
இலங்கை, தென் கொரிய அரசாங்கம் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், 2023 ஆம் ஆண்டில் 6,412 இலங்கையர் தென் கொரியாவில் வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றனர்.
தென்கொரியாவில் இலங்கையருக்கு அதிகளவான தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, அந்நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
அதன்படி, இதுவரை மிக மந்த கதியிலிருந்த கொரிய வேலைவாய்ப்பு, அமைச்சரின் நேரடித் தலையீட்டால் அதிகரித்துள்ளது.