Home » 2024 அனைவருக்கும் சுபீட்சமான ஆண்டாகட்டும்

2024 அனைவருக்கும் சுபீட்சமான ஆண்டாகட்டும்

- சுப்பையா ஆனந்தகுமார்

by damith
January 1, 2024 5:56 am 0 comment

இலங்கை சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் நிறைவடைகின்ற போதிலும், பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுதலையடைந்த ஏனைய நாடுகள் அடைந்துள்ள முன்னேற்றத்தை இலங்கை இன்னும் அடையத் தவறியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மலர்ந்துள்ள புத்தாண்டில் நாடு அபிவித்தி பாதைக்குச் செல்லும் என ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளரும் ஜனாதிபதியின் கீழ் இயங்கும் மூவர் அடங்கிய தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் குழுவின் உறுப்பினருமான சுப்பையா ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

புதுவருட சம்பிரதாயங்களின் உண்மையான அர்த்தங்களை புரிந்துகொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதற்கான அபிலாசையுடன் அவற்றை பின்பற்றுவது முக்கியம்.

நாட்டிலுள்ள பெரும்பான்மையான இளைஞர்கள் தற்போதுள்ள அரசியல் முறைமையில் மாற்றம் வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். அக்கோரிக்கையைப் புறக்கணிக்க முடியாது.

எதிர்வரும் தசாப்தத்திற்குள் வளமான இலங்கையை கட்டியெழுப்ப உத்தேசித்துள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கான ஆண்டாக இந்த மலர்ந்துள்ள புத்தாண்டு அமையுமென தான் எதிர்பார்ப்பதாகவும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு மிகச் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT