Saturday, April 27, 2024
Home » போதைப்பொருள் ஒழிப்பு: மேலும் 1,559 சுற்றிவளைப்புகளில் 1,554 பேர் கைது

போதைப்பொருள் ஒழிப்பு: மேலும் 1,559 சுற்றிவளைப்புகளில் 1,554 பேர் கைது

- இதுவரை 18,248 சுற்றிவளைப்புகளில் 18,107 பேர் கைது

by Rizwan Segu Mohideen
December 30, 2023 5:28 pm 0 comment

நச்சுப் போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் விநியோகிக்கும் வலையமைப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், நாடளாவிய ரீதியில் கடந்த டிசம்பர் 17ஆம் திகதி முதல் பொலிஸாரால் விசேட சோதனை சுற்றிவளைப்புகள் (யுக்திய) முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நேற்றையதினம் (29) 1,559 சுற்றிவளைப்புகளில் 1,522 ஆண்கள் மற்றும் 32 பெண்கள் உள்ளிட்ட 1,554 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 82 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் 2 சந்தேகநபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

போதைப்பொருளுக்கு அடிமையான 62 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகணத்தில் 787 சுற்றிவளைப்புகளில் 772 ஆண்களும் 75 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென் மாகாணத்தில் 158 சுற்றிவளைப்புகளில் 155 ஆண்களும் 03 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் (29) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் கைப்பற்றப்பட்ட போதைப்போருட்கள் விபரம்

  • ஹெரோயின் – 590.387 கிராம்
  • ஐஸ் – 1.313 கிராம்
  • கஞ்சா – 6.332 கி.கி.
  • கஞ்சா செடிகள் – 4,104
  • போதை மாத்திரைகள் – 119
  • ஏனைய போதைப்பொருட்கள் – 1.243 கிராம்

டிசம்பர் 17 முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றிவளைப்புகளின் விபரம்

  • முழு சுற்றிவளைப்புகளின் எண்ணிக்கை – 18,248
  • கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் எண்ணிக்கை – 18,107

போதைப்பொருள் ஒழிப்பு: 1,864 சுற்றிவளைப்புகளில் 1,865 பேர் கைது

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT