Saturday, April 27, 2024
Home » மாயமான நடுவரால் போட்டியில் தாமதம்
ஆஸி.–பாகிஸ்தான் டெஸ்ட்

மாயமான நடுவரால் போட்டியில் தாமதம்

by Gayan Abeykoon
December 29, 2023 1:34 pm 0 comment

மெல்போர்னில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நடுவர் மின்தூக்கியில் சிக்கிக் கொண்டதால் ஆட்டத்தில் சில நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது.

ஆட்டத்தின் மூன்றாவது நாளான நேற்று (28) பகல்போசண இடைவேளைக்குப் பின் அரங்கில் இருந்த 3ஆவது நடுவர் ரிச்சர்ட் இல்லிங்வர்த் திடீரென காணாமல்போனார். அதனால் போட்டி நிறுத்தப்பட்டது. நடுவர் எங்கே என்று அனைவரும் தேடினார்கள்.

சில நிமிடங்கள் கழித்து மிகவும் சோர்வாக வந்த நடுவர் நாற்காலியில் அமர்ந்து தாம் மின்தூக்கியில் மாட்டிக் கொண்டதாக வேடிக்கையாக தெரிவித்தார்.

மைதானத்தின் மற்றொரு தளத்திற்கு சென்று வரும் வழியில் அவர் மின்தூக்கியில் மாட்டிக்கொண்டதாக தெரிகிறது. அதன் பின் அதிலிருந்து வந்த அவர் நாற்காலியில் அமர்ந்து “நான் நன்றாக இருக்கிறேன்” என்பது போல் சமிக்ஞை காட்டினார்.

இந்த டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவின்போது ஆஸி. அணி இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் கைவசம் இருக்க 241 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 318 ஓட்டங்களை பெற்றதோடு பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 264 ஓட்டங்களை குறித்தது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வரும் ஆஸி. அணி நேற்று ஆட்டநேர முடிவின்போது 6 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஷோன் மார்ஷ் 96 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT