மர்மமான முறையில் உயிரிழந்திருந்த நபர் ஒருவருடைய சடலத்தினை மீகலாவ பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு நேற்று முன்தினம் 26ஆம் திகதி மாலை கிடைத்த தகவலுக்கமைய மீகலாவ 7வது கால்வாய் கனன்கமுவ பகுதிக்கு விரைந்த பொலிஸார் பிரதேச வாசிகளின் உதவியுடன் சடலத்தினை மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் 42 வயதுடைய பதவியகம, மீகலாவ பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் என அடயாளம் காணப்பட்டுள்ளதுடன் உயிரிழந்த விதம் குறித்து இதுவரையில் அைடயாளம் காணப்படவில்லை.
பொலிஸ் பாதுகாப்பில் சடலம் சம்பவயிடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பல கோணங்களிலும் மீகலாவ பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அநுராதபுரம் தினகரன் நிருபர்