Monday, May 13, 2024
Home » ‘Royal Academy’ இல் கற்கை நெறிகளை பூர்த்தி செய்தோருக்கு சான்றிதழ் வழங்கல்

‘Royal Academy’ இல் கற்கை நெறிகளை பூர்த்தி செய்தோருக்கு சான்றிதழ் வழங்கல்

by Gayan Abeykoon
December 28, 2023 7:34 am 0 comment

Royal Academy of Professional Studies ஏற்பாடு செய்த 3 வது வருட டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் அகடமியின் தலைவர் கலாநிதி லுக்மானுல் ஹக்கீம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. நிறுவனத்தின் பணிப்பாளர் பாத்திமா நுஸ்ரத் வரவேற்ப்பு உரை நிகழ்த்தினார்.

ஆங்கிலம், மனிதவள மேளாண்மை , உளவியல் மற்றும் ஆலோசனை, ஆசிரியர் பயிற்சி மற்றும் பாலர் பாடசாலை மற்றும் ஆரம்பக் கல்வி ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு டிப்ளோமா திட்டங்களில் 225 மாணவர், மாணவியர்கள் தங்களின் டிப்ளோமா சான்றிதழ்களை இந்நிகழ்வில் பெற்றுக்கொண்டனர்.

களனி பல்கலைக்கழகத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் முகாமைத்துவப் பிரிவின் பேராசிரியர் கே.ஏ.எஸ். தம்மிக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஜெயரஞ்சன் யோகராஜ், சிரேஷ்ட ஆலோசகர் திருமதி சுசீலா, உளவியலாளர் எம்.ஐ. இப்திகார் அகமட் உட்பட முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

ருசைக் பாரூக்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT