சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டாக்டர் சமன் ரத்நாயக்கவின் அலுவலகம், குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு அதிகாரிகளால் ஐந்து மணித்தியாலங்கள் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
குற்றத்தடுப்பு விசாரணை திணைக்கள அதிகாரிகள் நேற்றுக்காலை 10 மணிமுதல் ஐந்து மணித்தியாலங்கள் அந்த அலுவலகத்தை சோதனையிட்டனர்.
இதன்போது,மேலதிக செயலாளரிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. தரமற்ற மருந்தை இறக்குமதி செய்துள்ள விவகாரம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவுக்கமைய, இந்த அலுவலகம் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அத்துடன் அந்த அலுவலகத்தை சீல் வைப்பதற்கும் குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
(லோரன்ஸ் செல்வநாயகம்)