ஐஸ்லாந்தில் உள்ள எரிமலை வெடித்ததில் நெருப்புக் குழம்பு கொப்பளித்துத் தெறிக்கும் காட்சிகள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
தலைநகருக்குத் தென்மேற்கே உள்ள வட்டாரம் கடந்த சில வாரங்களாக உச்ச விழிப்புநிலையில் வைக்கப்பட்டிருந்தது. கடந்த திங்கட்கிழமை காலை நிலநடுக்கத்துடன் அந்த எரிமலை வெடிக்க ஆரம்பித்ததாக ஐஸ்லாந்து வானிலை அலுவலகம் கூறியது.
செம்மஞ்சள் நிறத்தில் குழம்பு வெடித்துத் தெறிப்பதையும் அதைச் சுற்றி செந்நிறப் புகை சூழ்ந்திருப்பதையும் படங்களும் காணொளிகளும் காட்டின.
சில வாரங்களுக்கு முன்னரே வெடிப்பு எதிர்பார்க்கப்பட்டதால் அந்த வட்டாரத்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். “இயற்கையின் சீற்றம் தணிந்துவிட்டதா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று ஐஸ்லாந்து தலைவர் எக்ஸ் சமூகதளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு புதிதல்ல. அங்கு எந்நேரத்திலும் வெடிக்கலாம் என்ற நிலையில் 33 எரிமலைகள் உள்ளன.