இ.போ.ச காத்தான்குடி டிப்போவின் முகாமையாளர் தாக்குதலுக்குள்ளாகி காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
முகாமையாளர் நேற்றிரவு (18) 9.00 மணியளவில் டிப்போவில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வீட்டுக்கு அருகாமையில் வைத்து முச்சக்கர வண்டியில் வந்த காத்தான்குடி டிப்போவில் கடமை செய்யும் டிப்போ பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே தன்னை தாக்கினார் என தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் டிப்போ முகாமையாளர் யு.எல். நசார்தின் தெரிவித்தார்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் டிப்போ முகாமையாளரிடம் காத்தான்குடி பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்ததுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்
தாக்குதல் நடத்திய டிப்போ பாதுகாப்பு உத்தியோகத்தர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
ரீ.எல்.ஜவ்பர்கான் – மட்டக்களப்பு குறூப் நிருபர்