Saturday, April 27, 2024
Home » சக தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயம்

சக தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயம்

தமிழரசுக்கட்சியின் எதிர்காலம் குறித்து சிறிதரன் எம்.பி

by gayan
December 12, 2023 7:50 am 0 comment

சக கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதும், பயணிப்பதும் காலத்தின் கட்டாயமாக உணரப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இலங்கை தமிழரசு க்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களை சந்தித்து அவர் கலந்துரையாடினார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து

தெரிவிக்ைகயிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இணைந்த வடக்கு கிழக்கில் பிராந்திய ரீதியாகச் செயற்படும் மிகப்பெரும் பேரியக்கமாக எமது தமிழரசுக் கட்சி காணப்படுகிறது.காலச்சுழற்சிக்கேற்ப இக்கட்சி புதிய தலைவர்களை அறிமுகம் செய்திருக்கிறது.

இயற்கையும், காலமுமே தலைவர்களை கொண்டு வருகிறது. எனவேதான்,இது விவேகமான ஒரு உள்ளக தேர்தலாக காணப்படுகிறது.

எனது ஆளுமைக்கும் எனக்குள்ள ஆற்றலுக்கும் ஏற்றாற்போல் ஏனைய எல்லோரையும் கூட்டாக அரவணைத்து, தமிழரசுக் கட்சியை கட்டி வளர்க்க வேண்டும். ஏனைய கட்சிகளோடு நல்லுறவைப் பேணி தமிழ் தேசிய விடுதலைக்கான பயணத்தை முன்னெடுப்போம்.

ஏனைய சக கட்சிகளுடன் இணைந்து பயணிப்ப தானது, தற்போதைய காலத்தின் கட்டாயமாக உணரப்படுகிறது.இதனை,நாங்கள் நிராகரிக்கவில்லை.தமிழ் மக்களுக்கான தேவையாகவும் இது இருக்கிறது. இந்த ஒற்றுமைக்காக என்னென்ன விட்டுக்கொடுப்புகளைச் செய்ய முடியுமோ, அதைச் செய்யலாம்.சேர்ந்து செயற்படும் விடயங்கள் தொடர்பில் பேசி, இதற்கான முயற்சிகளை முன்னெடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT