167
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணப் பிரதேசத்திலுள்ள டெங்கு தடுப்பு உதவியாளர்கள் நேற்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில், டெங்கு தடுப்பு உதவியாளர்களால் கையளிக்கப்பட்டுள்ளது.
நிரந்தர நியமனம் மற்றும் நிலுவை கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென கோரியே பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
(யாழ். விசேட நிருபர்)