177
மன்னார் மறைமாவட்டத்தின் கீழியன்குடியிருப்பு புனித சவேரியாரின் பெருவிழா நேற்றுமுன்தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
பங்குத் தந்தை அருட்பணி லோறன்ஸ் லியோன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. திருப்பலியானது பேசாலை பங்குத் தந்தை அருட்பணி அன்ரன் அடிகளாரின் தலைமையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இக்கூட்டுத்திருப்பலியை அருட்பணி எஸ்.ஜெஸ்மன்ராஜ் அடிகளார் , அருட்பணி எஸ்.அருண்தாஸ் குரூஸ் அடிகளார் ஆகியோர் இணைந்து நடாத்தினர்
திருப்பலி முடிவில் திருச்சுரூபம் பவனியாக வெளியில் ஏடுத்துச் செல்லப்பட்டு திருச்சுரூப ஆசீரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
(தலைமன்னார் விசேட நிருபர்)