சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான நன்னடத்தை பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணுக்கு எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண், நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (02) கல்முனை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து குறித்த பெண் நேற்று (03) கல்முனை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எல். நதீர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவருக்கு இன்று (04) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து அவரை கல்முனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 28 வயதுடைய குறித்த பாடசாலையின் மேற்பார்வையாளரான பிறின்ஸி புலேந்திரன் என்பவர் திருகோணமலை மாவட்டம், உப்புவெளியை சேர்ந்தவராவார்.
நன்னடத்தை பாடசாலை சிறுவனின் மர்ம மரணம்; பெண் மேற்பார்வையாளர் கைது