சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெனாண்டோ வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (30) காலை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
பௌத்த மதத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு, சிங்கப்பூர் சென்ற போதகர் ஜெரோம் பெனாண்டோ நேற்று (29) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இதன் பின்னர் நீதிமன்றத்தால் அவரை கைதுசெய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் அவர் இலங்கை வரும் போது கைதுசெய்ய வேண்டாமெனவும் நாட்டுக்கு வருகை தந்து 48 மணிநேரத்தில் வாக்குமூலமொன்றை வழங்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், போதகர் ஜெரோம் பெனாண்டோ இன்று வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.