183
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு மொறட்டுவை எகொடஉயன அறபாத் முஸ்லிம் மகாவித்தியாலயத்திலிருந்து தோற்றிய மாணவர்களுள் நான்கு மாணவிகள் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக அதிபர் திருமதி எம்.ஆர்.எப். ரிஸ்னா லுத்பி தெரிவித்தார். சித்தியடைந்த மாணவிகளான எம்.எம்.எப். மூமினா (154), எம்.எப்.எப். ஸைனப் (148 ), எம்.ஐ.எப். ஷபிய்யா (150), என்.டீ.எப். நபீலா (160) ஆகியோர் சித்தியடைந்துள்ளனர். இவர்கள் ஆசிரியைகளுடன் எடுத்துகொண்ட படம்.
(படம் : மொறட்டுவை மத்திய விசேட நிருபர்)