மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட எல்லைப்புற கிராமமான நவகிரியில் இரண்டு கிலோமீற்றர் வீதி கார்பட் இடப்பட்டு புனரமைக்கும் நடவடிக்கைகள் நேற்றுமுன்தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் மக்கள் முன்வைத்த வேண்டுகோளுங்கிணங்க இவ்வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் பிரதிநிதியாக கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்தார். இதன்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பெரியபோரதீவு தினகரன் நிருபர்