Saturday, May 11, 2024
Home » கனகசூரியம் யோகானந்தனுக்கு இலக்கிய வித்தகர் விருது

கனகசூரியம் யோகானந்தனுக்கு இலக்கிய வித்தகர் விருது

by mahesh
November 22, 2023 10:40 am 0 comment

கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான இலக்கிய விழாவில் ஓய்வுபெற்ற அதிபரும் கவிஞருமான கனகசூரியம் யோகானந்தனுக்கு இலக்கிய வித்தகர் விருது கிடைக்கவுள்ளது.

திருகோணமலையைச் சேர்ந்த கவிஞர் கனகசூரியம் யோகானந்தன் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இலக்கியப் பணி புரிந்து வருகிறார். இதுவரை ஐந்து கவிதை நூல்களை எழுதியுள்ளார்.

2006 கவிதை நூலுக்கான சாஹித்ய மண்டலப் பரிசினைப் பெற்றுள்ளார். 2019 இல் கவிதை நூலுக்கு ‘பிரமிள்’ விருதும் நகர முதல்வர் விருதும் பெற்றுள்ளார். அத்தோடு இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபாடு கொண்ட இவர் கவியரங்கம், பட்டிமன்றம் போன்றவற்றில் தலைமை ஏற்று பல மாணவர்களை ஊக்குவித்து வருகிறார்.

தம்பலகாமம் குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT