பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 98ஆவது பிறந்த தினத்தை, கொழும்பு, புதுச் செட்டித் தெருவிலுள்ள ஸ்ரீ சத்ய சாயி மத்திய நிலையம், நாளை 23ஆம் திகதி வியாழக்கிழமை, காலையில் பிரசாந்திக் கொடியினை ஏற்றி, அன்னதான நிகழ்வுகளுடன், முழு நாள் நிகழ்ச்சிகளாக, திருவுஞ்சல், பிறந்தநாள் கேக் வெட்டுதல், சாயி பூஜை, பஜன் மற்றும் சீரடி சாயி பாபாவின் நான்கு கால ஆராத்திகளுடன் நடைபெறவுள்ளன.
இலங்கை சத்ய சாயி பாபா அறக்கட்டளையின் தலைவர் எஸ்.என்.உதயநாயகம் தலைமையில் இடம்பெறும் வழிபாடுகளில் முதல் நாளான 22ஆம் திகதி புதன்கிழமை மாலை, புட்டபர்த்தியில் பாபாவின் சமாதியில் வைத்து பூஜித்து எடுத்துவரப்பட்ட, பாபாவின் திருவுருத்துக்கு, நவதிரவிய அபிஷேகம் செய்யப்பட்டு, சித்திரத்தேர் பவனி இடம்பெறவுள்ளது.