பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டடம் அண்மையில் (13) திறக்கப்பட்டு, வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.
வெளிநோயாளர் மற்றும் கிளினிக் பிரிவுகளைக்கொண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டடத்தை கையளிக்கும் நிகழ்வு, பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் யூ.எல்.எம்.சகீல் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் பிரதம அதிதியாகவும், முன்னாள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும், தற்போதைய மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான டொக்டர் ஜீ.சுகுணன் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டு கட்டடத்தை கையளித்தனர்.
(பாலமுனை விசேட நிருபர்)