Sunday, April 28, 2024
Home » வங்காள விரிகுடா பகுதியில் தாழமுக்கம்; தொடர்ந்தும் வளிமண்டலத்தில் தளம்பல்

வங்காள விரிகுடா பகுதியில் தாழமுக்கம்; தொடர்ந்தும் வளிமண்டலத்தில் தளம்பல்

- நாட்டின் கரையோர பகுதிகளில் அவ்வப்போது மழை

by Rizwan Segu Mohideen
November 14, 2023 7:46 am 0 comment

– ஏனைய பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்குப் பின் மழை

தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவாகி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக, நாட்டை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் தளம்பல் நிலை தொடர்ந்தும் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்றையதினம் (14) நாட்டின் வடக்கு, வடமேல், மேல், தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமத்திய, வட மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT