Sunday, April 28, 2024
Home » நெல் களஞ்சியங்களிலிருந்து 10 இலட்சம் ரூபா நெல் மாயம்!

நெல் களஞ்சியங்களிலிருந்து 10 இலட்சம் ரூபா நெல் மாயம்!

by damith
October 24, 2023 7:50 am 0 comment

நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியத்திலிருந்த ஒரு தொகை நெல், காணாமல் போயுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

களஞ்சியசாலைகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான நெல்லே காணாமல் போயுள்ளது.

இதுகுறித்து, நெல் சந்தைப்படுத்தல் சபையின் உள்ளக ஊழியர்கள் குழு அமைச்சரிடம் முறைப்பாடு செய்துள்ளது. குருநாகல் மாவட்டத்தில் உள்ள ஐந்து நெல் களஞ்சியசாலைகளிலே,நெல் காணாமல் போயுள்ளது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கையை மூன்று நாட்களுக்குள் வழங்குமாறு சந்தைப்படுத்தல் சபைத் தலைவருக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பான அறிக்கை கிடைத்தவுடன் முழுமையான விசாரணைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT