15ஆவது ஆசிய பிராந்திய நிலைபேறான போக்குவரத்து கூட்டமும் முதலாவது ஆசிய பசிபிக் ரயில்வே மாநாடும் மலேசியாவில் ஆரம்பமானது. பல நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் இம் மாநாடு நான்கு நாட்கள் மலேசியாவில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் போக்குவரத்து பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன கலந்துகொண்டுள்ளார்.
சர்வதேச ரயில்வே சங்கம், ஐக்கிய நாடுகளின் பிராந்திய அபிவிருத்தி மத்திய நிலையம், மலேசிய போக்குவரத்து அமைப்பு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றால் ஏற்பாடு செய்யப்படும்’ முதலாவது ஆசிய பிராந்திய ரயில்வே மாநாட்டில்’ விசேட அதிதியாக போக்குவரத்து பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன கலந்துகொண்டுள்ளார்.