Sunday, April 28, 2024
Home » இந்திய இரசிகர்கள் மீது பாகிஸ்தான் முறையீடு

இந்திய இரசிகர்கள் மீது பாகிஸ்தான் முறையீடு

by gayan
October 19, 2023 11:14 am 0 comment

அஹமதாபாத் நரேந்திர மோடி அரங்கில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான உலகக் கிண்ண போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை நோக்கி ரசிகர்களின் நடத்தை குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, சர்வதேச கிரிக்கெட் கெளன்சிலிடம் முறைப்பாடு செய்துள்ளது.
கடந்த சனிக்கிழமை (14) நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டியது. போட்டியை காண அரங்கில் சுமார் 100,000 ரசிகர்கள் திரண்டனர். இதில் ஒருசில பாகிஸ்தான் ரசிகர்கள் தவிர அதிக பெரும்பான்மையாக இந்திய ரசிகர்களே இருந்தனர்.
இதில் சமூக ஊடகத்தில் பரவிய வீடியோக்கள் அடிப்படையில் குறிப்பிட்ட சில சம்பவங்களை வைத்தே பாகிஸ்தான் முறையிட்டுள்ளது. இதில் நாணய சுழற்சியில் பாக். அணித் தலைவர் மீது அதிருப்தி கூச்சல் எழுப்பப்பட்டதோடு, ஆட்டமிழந்து செல்லும் மொஹமட் ரிஸ்வான் மீது “ஜெய் ஸ்ரீராம்” கோசம் எழுப்பப்பட்டிருந்தது. களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த ஹசன் அலி மீதும் இவ்வாறான கோசம் எழுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டுக்கான ஐ.சி.சியின் பாகுபாட்டு எதிர்ப்பு கொள்கையின் 11ஆவது பிரிவின் கீழ் பாகிஸ்தான் முறையிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT