Sunday, April 28, 2024
Home » வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பஸ்

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பஸ்

- 2 பாடசாலை மாணவர்கள் உட்பட 15 பேர் காயம்

by Prashahini
October 19, 2023 9:36 am 0 comment

அனுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் மரதன்கடவல பகுதியில் வீதியை விட்டு விலகிச் சென்று மரத்தில் மோதிய சம்பவமொன்று நேற்று (18) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

ஏ 9 வீதியில் 105 மற்றும் 106 மைல்கல் பகுதிக்கு இடையில் வளைவு ஒன்றில் குறித்த பஸ் வீதியை விட்டு விலகிச் சென்று விபத்திற்குள்ளாகியதோடு, பஸ்சில் பயணித்தவர்களில் 15 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக மரதன்கடவல பொலிசார் தெரிவித்தனர்.

காயத்திற்குள்ளானவர்கள் சிகிச்சைக்காக மரதன்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்.அதில் பலத்த காயத்திற்குள்ளான பலர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயத்திற்குள்ளானவர்களில் இருவர் பாடசாலை மாணவர்களாவர்.

விபத்திற்குள்ளான பஸ்சின் சாரதி மேலதிக விசாரணைக்காக மரதன்கடவல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விபத்திற்கான காரணம் இதுவரை வெளிப்படுத்தப்படாத நிலையில் சாரதிக்கு பஸ்சின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT