தென்மராட்சிப் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட எழுதுமட்டுவாழ் கிராமத்திலுள்ள மாம்பழ உற்பத்தி வலயத்தை விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பார்வையிட்டிருந்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டு விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மேற்படி மாம்பழ உற்பத்தி வலயமானது 500 செய்கையாளர்களை உள்ளடக்கியுள்ளது. இங்கு விஜயம் மேற்கொண்டிருந்த விவசாய அமைச்சர் செய்கையாளர்களைச் சந்தித்து அவர்களுடைய குறை நிறைகளை கேட்டறிந்திருந்தார்.
இதன்போது விவசாயிகள், குரங்குகளை கட்டுப்படுத்த வாயுத்
துப்பாக்கி வீதிப்புனரமைப்பு மற்றும் மாம்பழத்தை சந்தைப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ,முன்னாள் விவசாய பிரதி அமைச்சருமான அங்கஜன் இராமநாதனுடைய ஏற்பாட்டில் இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(சாவகச்சேரி விசேட நிருபர்)