333
புத்தளம் நகரின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.இஸட். அப்துல் நமாஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) மாலை காலமானார். புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் ஆசிரியரான அப்துல் நமாஸ் ‘புத்தெழில்’ பத்திரிகையின் ஆசிரியராகவும், புத்தளம் மாவட்ட தமிழ் செய்தியாளர் சங்கத்தின் தலைவராகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் புத்தளம் மாவட்ட அமைப்பாளராகவும் கடமையாற்றியதோடு பாடசாலைகள் தோறும் ஊடக கழகங்களை அமைத்து மாணவர்கள் மத்தியில் ஊடக பயிற்சிகளை வழங்க முன்னிலை வகித்தவர். இவர் ஒரு சிறந்த சமூக சேவையாளராவர்.
அன்னாரின் ஜனாஸா புத்தளம் மஸ்ஜித் பகா மைய வாடியில் நேற்று இரவு 09 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜனாஸாவில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
புத்தளம் தினகரன், புத்தளம் விஷேட நிருபர்கள்