பாகிஸ்தானுக்கு எதிரான இளையோர் கிரிக்கெட்டில் ஆடும் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
16 பேர் கொண்ட குழாத்தில் றோயல் கல்லூரியின் துடுப்பாட்ட வீரர் சினத் ஜயவர்தன தொடர்ந்து தலைவராக செயற்படவிருப்பதோடு ரிச்மண்ட் கல்லூரி சுழற்பந்து சகலதுறை வீரர் மல்ஷ தருப்பதி உப தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற பெரும்பாலான வீரர்கள் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தில் தமது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். இதில் கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரியைச் சேர்ந்த விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ஷருஜன் ஷண்முகநாதனும் அணியில் இடம்பிடித்துள்ளார்.
கராச்சியில் உள்ள தேசிய வங்கி அரங்கில் எதிர்வரும் ஒக்டோபர் 15 தொடக்கம் 18 ஆம் திகதி வரை நடைபெறும் இளையோர் டெஸ்ட் போட்டியுடன் இந்தத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஐந்து போட்டிகளைக் கொண்ட இளையோர் ஒருநாள் போட்டித் தொடர் ஒக்டோபர் 22 தொடக்கம் 31 ஆம் திகதி வரை அதே மைதானத்தில் நடைபெறும்.
இலங்கை இளையோர் குழாம்: சினெத் ஜயவர்தன (தலைவர்), மல்ஷ தருப்பதி (உப தலைவர்), புலிந்து பெரேரா, விஷான் ஹெலம்பகே, ரவிஷன் நெத்சர, ஷருஜன் ஷண்முகநாதன், தினுர களுபஹன, விஹாஸ் தெளமிக்க, விஷ்வ லஹிரு, கருக சன்கேத், ரவிஷன் பெரேரா, கவீஷ பியுமால், ஹிரான் ஜயசுந்தர, கீதிக டி சில்வா, ருசந்த கமகே, மனுல குளரத்ன.