231
கொழும்பு டூப்ளிகேஷன் வீதியில் பஸ் மீது பாரிய மரம் விழுந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து கொழும்பு நகரின் வீதியின் இரு பக்கங்களிலும் உள்ள பாதுகாப்பற்ற மரங்களை கொழும்பு நகர சபைநேற்று (8) காலை முதல் அகற்றி வருகிறது. அதன்படி கொழும்பு மாநகர எல்லையில் பல வீதிகளில் சுமார் 100 வருடங்கள் பழமையான பல பெரிய மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதுடன் சில மரங்களின் பெரிய கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.
படங்கள் : சுலோச்சன கமகே