களுத்துறை மாவட்ட அகதிய்யா சம்மேளனத்தின் 22ஆவது ஆண்டு விழாவும் மாணவர்களது பரிசளிப்பும் நேற்று முன்தினம் (07) பாணந்துறை, அம்பலாந்துவ இல்மா முஸ்லிம் வித்தியாலய மைதானத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. களுத்துறை மாவட்ட அகதிய்யா சம்மேளனத்தின் தலைவர் எம்.எம்.எம். உவைன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வெளிநாட்டு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரனி அலி சப்ரி மற்றும் சமய கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், மர்ஜான் பளீல், மலேசியா நாட்டின் உயர் ஸ்தானிகர் பதி ஹசாம் அடம் உட்பட முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர். (படங்கள்: அஷ்ரப் ஏ சமத், பாணந்துறை மத்திய விசேட நிருபர்)
களுத்துறை மாவட்ட அகதிய்யா சம்மேளன விழா
300