Monday, May 6, 2024
Home » நாட்டில் வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு

நாட்டில் வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு

உரிமையாளர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

by damith
October 9, 2023 8:04 am 0 comment

நாட்டின் பல பகுதிகளில் வாகனத் திருட்டுச் சம்பவங்கள் பாரிய அளவு அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பல கோடி ரூபா பெறுமதியான வாகனங்களை திருடிய சந்தேக நபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளில் பல வாகன மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த”டோல்பின் சந்தன” என்ற நபரே மாவத்தகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது

சந்தேக நபர் போலி ஆவணங்களை தயாரித்து திருடப்பட்ட வாகனங்களை பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.

காலி, தங்கல்ல, ஹோமாகம உள்ளிட்ட பல பகுதிகளில் இவர்,வாகனங்களை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT