Sunday, May 19, 2024
Home » சப்ரகமுவ மாகாணத்தில் தமிழ் ஆசிரிய உதவியாளர் 100 பேருக்கு நிரந்தர நியமனம்

சப்ரகமுவ மாகாணத்தில் தமிழ் ஆசிரிய உதவியாளர் 100 பேருக்கு நிரந்தர நியமனம்

by damith
October 9, 2023 7:58 am 0 comment

சப்ரகமுவ மாகாணத்தில் மலையக தமிழ் பாடசாலைகளில் ஆசிரியர் உதவியாளர்களாக சேவையாற்றும் 100 பேருக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவின் திசாநாயக்க தலைமையில் அண்மையில் சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

க.பொ.த உயர்தரத்தில் சித்திபெற்ற 445 பேர் 2015ஆம் ஆண்டு சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள மலையக பாடசாலைகளுக்கு ஆசிரியர் உதவியாளர்களாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

இம் மாகாணத்தில் ஆசிரியர் பயிற்சியை முழுமையாக நிறைவு செய்துள்ள ஆசிரியர் உதவியாளர்கள் நூறு பேருக்கே ஆசிரியர் நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவின் திசாநாயக்க, சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் மஹிந்த எஸ். விரசூரிய, மாகாண பிரதான அமைச்சின் செயலாளர் பிரபாத் உதாகர, சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சாமர பமுனு ஆராச்சி, சப்ரகமுவ மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் கே.ஏ.சுனிதா உட்பட சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் பணிப்பாளர்கள் ஆசிரியர் உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காவத்தை தினகரன் விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT