Sunday, April 28, 2024
Home » பாதை தொடர்பில் இரு வீட்டாருக்கு இடையில் முரண்; 03 மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை

பாதை தொடர்பில் இரு வீட்டாருக்கு இடையில் முரண்; 03 மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை

by Prashahini
October 7, 2023 7:43 pm 0 comment

யாழ்ப்பாணத்தில் இரு வீட்டாருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் 03 மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கட்டுவான் பகுதியில் நேற்று (06) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அப்பகுதியில் வசிக்கும் இரு வீட்டாருக்கு இடையில் , பாதை தொடர்பில் நீண்ட காலமாக முரண்பாடு ஏற்பட்டு வந்துள்ளது .

இந்நிலையில் ஒரு வீட்டில் வெளிநாட்டில் இருந்து வந்த நபர் ஒருவர் தங்கி இருந்தார். அவர் தான் தங்கியிருந்த வீட்டாருக்கு ஆதரவாக வன்முறை கும்பல் ஒன்றினை கூலிக்கு அமர்த்தி , அவர்களுடன் முரண்பட்ட வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வீட்டில் நின்ற இரு மோட்டார் சைக்கிளையும் வன்முறை கும்பல் தீக்கிரையாக்கி உள்ளது.

குறித்த வன்முறை கும்பல் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு , வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டை தீக்கிரையாக்கி விட்டு தப்பி செல்ல முற்பட்ட வேளை பாதிக்கப்பட்ட வீட்டார் வன்முறை கும்பலை துரத்திய போது , அவர்கள் தப்பி செல்லும் போது ஒரு மோட்டார் சைக்கிள்களை கைவிட்டு சென்றுள்ளனர். அதனை வீட்டார் தீக்கிரையாக்கி உள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT