அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட சில அமைப்புகளால் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று (02) ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
மதுஷான் சந்திரஜித், கல்வெவ சிறிதம்ம தேரர், துமிந்த நாகமுவ, ஜோசப் ஸ்டாலின், தம்மிக்க முனசிங்க, தென்னே ஞானானந்த தேரர் உள்ளிட்ட 9 பேர் மற்றும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றுவோருக்கு எதிராக குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றுவோர் ஜனாதிபதி செயலகம், செரமிக் சந்தியிலிருந்து NSA சுற்றுவட்டம் வரையும், அங்கிருந்து பாலதக்ஷ மாவத்தை வரையும் செல்வதை தடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கொழும்பு கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஆகியவற்றிற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.