மீலாதுன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும், அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் !
அன்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளான இன்று, தாய் நாடான இலங்கையின் வளர்ச்சிக்காக எல்லாம் வல்ல அல்லாஹுதஆலாவிடம் பிரார்த்திப்போம். எல்லாம் வல்ல அல்லாஹ் இவ்வருடம் நம் அனைவருக்கும் புனித ரபீஉல் அவ்வல் மாதத்தில் மவ்லிதுர் ரசூல் மஜ்லிஸை 12-நாட்கள் நடாத்த உதவினான். நமது உயிரிலும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்றை ஓதி மக்களுக்கு உணவு வழங்கும் பாக்கியமும் கிடைத்தது. எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்ஹம்து லில்லாஹ்!
நமது அன்பிற்குரிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள், ஸலாத்தை பரப்புங்கள், ஜாதி, மத வேறுபாடின்றி மக்களுக்கு உணவு வழங்குங்கள், இந்த புனித மாதம் இந் நல்ல செயல்களைச் செய்ய ஒரு நல்ல வாய்ப்பாகும். இந்த மீலாதுன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்தநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களும் இந்த நன்னாளில் நமது நாட்டில் உள்ள அனைத்து சமூகத்தினருடனும் அமைதியுடனும், சகோதரத்துவத்துடனும், நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும். எனவே, நாம் நமது அண்டை வீட்டார்களுக்கும் மற்றும் ஏழை மக்களுக்குக்கும் ஜாதி பேதம் பாராமல் உதவுவோம். இந்த புனித நாளில் அவர்களை நன்றாக நடத்துவதும் அவர்களின் சிரமங்களுக்கு உதவுவதும் மிகவும் சிறந்ததாகும்.
பல்சமய, கலாசார நாடான இலங்கையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப இந்த புனித நாளில் நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்.