இலங்கை கிரிக்கெட் அணி வீரர் அசித்த பெனாண்டோ இங்கிலாந்து கவுண்டி அணியான நொட்டிங்ஹம்ஷயர் (Nottinghamshire) அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அந்த வகையில், முதன் முறையாக கவுண்டி போட்டிகளில் விளையாடவுள்ள அவர், தற்போது இடம்பெற்று வரும் கவுண்டி சம்பியன்ஷிப் 2023 தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அதற்கமைய, கென்ட் (Kent) கிரிக்கெட் கழகம், லங்காஷயர் (Lancashire) கிரிக்கெட் கழகம் மற்றும் மிடில்செக்ஸ் (Middlesex) கழகம் ஆகிய அணிகளுக்கு எதிரான மூன்று போட்டிகளில் நோட்டிங்கம்ஷையர் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி அவர் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அசித்த பெனாண்டோ, கடந்த வருடம் இடம்பெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்காக சிறப்பாக ஆடியிருந்தார்.
இவர் ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருந்த போதிலும், அன்றையதினம் வெளிப்படுத்திய துடுப்பாட்டம் மூலம் இலங்கை கிரிக்கெட் இரசிகர்களின் மனதில் அவர் இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இஷ்ரத் இம்தியாஸ்