Home » மது போதையில் பாடசாலை சென்ற மாணவி

மது போதையில் பாடசாலை சென்ற மாணவி

by Prashahini
August 18, 2023 10:52 am 0 comment

கெக்கிராவ பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14 வயது மாணவி ஒருவர் நேற்று (17) மது அருந்தி விட்டு பாடசாலைக்கு சென்ற நிலையில் மாணவியை கைது செய்த பொலிஸார் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட மாணவி பாடசாலை அருகில் நின்ற போது அவரது நடவடிக்கை மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் மாணவியிடம் விசாரணை நடத்திய போது அவர் மது அருந்தியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து பொலிஸார் மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த மாணவியிடம் பொலிஸார் விசாரணை நடத்திய போது தன்னுடைய தாத்தாவே தன்னை மது பழக்கத்திற்கு அடிமையாக்கியதாக குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT