1K
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பான் வெளியுறவு அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா நேற்றிரவு (28) இலங்கை வந்தடைந்தார்.
இலங்கை வந்த அவரை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, விமான நிலயத்தில் வரவேற்றார்.
இன்று (29) காலை ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது இலங்கைக்கு தொடர்ச்சியான தனது ஆதரவை வழங்க ஜப்பான் மிகவும் ஆர்வமாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கடன் வழங்கிய அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய, வெளிப்படையான மற்றும் ஒப்பீட்டளவிலான கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் முக்கியத்துவத்தை அவர் இதன்போது வலியுறுத்தினார்.