நாட்டின் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை

- வட மாகாணம், புத்தளம், அநுராதபுரம் பகுதிகளில் பலத்த காற்று

இன்றையதினம் (22) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்கு கரையோரப் பிரதேசங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும்மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்திலும் அநுராதபுரம், புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


Add new comment

Or log in with...