- ஒரு சில இடங்களுக்குள் நுழைய நீதிமன்ற தடை
தொழிற்சங்க போராட்ட பேரணி காரணமாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஓல்கொட் மாவத்தையின் ஒரு ஒழுங்கை போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளது.
கோட்டை பகுதியிலிருந்து காலி வீதியை நோக்கிய வீதியே இவ்வாறு தடைப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு, காலி முகத்திடல் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு பிரவேசிக்க ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ள 8 தொழிற்சங்களுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மு.ப. 11.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை இத்தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுமென தெரிவித்து அவ்வார்ப்பாட்டத்தை நடத்தாதிருக்கும் உத்தரவை கோட்டை பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை பரசீலித்த நீதிமன்றம், குறித்த சில வீதிகளுக்கு நுழைவதை தடுக்கும் உத்தரவை வழங்கியுள்ளது.
Add new comment