121
கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான குடிநீர் வழங்கும் நிகழ்வு கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.
Muslim Aid நிறுவனத்தின் அனுசரணையோடு இக்குடிநீர் இணைப்பானது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் ஆகியோரோடு சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் Muslim Aid நிறுவன உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
(கிண்ணியா தினகரன் நிருபர்)