கொள்ளையிட முயன்ற ஒரு கோடி ரூபா மீட்பு

ஹோமாகம, கலவிலவத்த எரிபொருள் நிலையத்திலிருந்து வங்கியில் வைப்பிலிடுவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபா பணம், வங்கிக்கு முன்னால் வைத்து கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
இன்று (19) இடம்பெற்ற இச்சம்வபத்தின்போது, குறித்த பணத்தை கொள்ளையிட முயன்ற இருவரும், பொலிஸார் ஒருவர் மற்றும் இராணுவ கெப்டன் ஒருவரின் உதவியுடன் மடக்கிப் பிடிக்கப்பட்டு, பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
 
வங்கியின் முன்னால் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி பண்டார, குறித்த சம்பவம் இடம்பெற்ற வேளையில், விடயத்தை புரிந்துகொண்டு கொள்ளையர்களை துரத்திச் சென்றுள்ளார்.
 
பொலிஸ் வீரர் ஒருவர், இருவரை துரத்திச் செல்வதை அவதானித்த, இராணுவ கெப்டன், அவருடன் இணைந்து குறித்த கொள்ளையர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்துள்ளனர்.
 
கத்தியுடன் சண்டையிட்ட கொள்ளையர்களை மடக்கிப்பிடித்த அவர்கள், குறித்த பணப்பையையும் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...