வாகன முறைகேடு: விமல் ஆணைக்குழுவில், சரத் விளக்கமறியலில்

 

றிஸ்வான் சேகு முகைதீன்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச, பொலிஸ் நிதிமோசடி விசாரணை பிரிவில் இன்று (07) ஆஜரானார்.

கடந்த அரசாங்க காலத்தில் வீடமைப்பு, பொறியியல் மற்றும் கட்டுமான அமைச்சராக இருந்தபோது ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காகவே அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு ஆஜரான அவர், தான் சுகவீனமுற்றிருப்பதாக தெரிவித்து அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச வாகன முறைகேடு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விமல் வீரவங்சவின் சகோதரர் சரத் வீரவங்சவுக்கு எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...