மின்சாரக் கட்டணம் குறைக்கப்படவுள்ளதால் அதற்கு ஏற்ப, நீர்க் கட்டணத்தையும் குறைக்க தீர்மானித்துள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “மின்சாரக் கட்டணக் குறைப்புக்கு அமைவாக நீர்க் கட்டணத்தைக் குறைக்கும் வகையில் நீர் கட்டணச் சூத்திரமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கமைய தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்து விலைச் சூத்திரம் வகுக்கப்படும்” எனவும் அமைச்சர் கூறினார்.