170
கிறிஸ்மஸ் விடுமுறையின் பின்னர் நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட ‘யுக்திய’ நடவடிக்கைகளில் 1,422 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 35 பேர் தடுப்புக்காவல் உத்தரவில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருளுக்கு அடிமையான 37 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.